கேலக்ஸி குழுமம், தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் பண்பாட்டை உலகம் முழுவதும் பரப்பும் உறுதியான நோக்கில் செயல்பட்டு வருகிறது.
புத்தக வெளியீடுகள், மொழியாக்கங்கள், மின்னிதழ்கள், கலாசார நிகழ்வுகள், இலக்கிய உரையாடல்கள் — இவற்றின் மூலம், தமிழின் ஒளியை எல்லைகளுக்கு அப்பாற்பட்டதாகப் பரப்புவது எங்களது பெருமைமிக்க பணி.
இந்தக் குழுமத்தின் நோக்கம் — வெளிநாட்டில் வாழ்ந்தாலும் தாய்மொழியின் அழகையும் பெருமையையும் நம் குழந்தைகளிடம் கொண்டு சேர்ப்பது.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, மாதந்தோறும் “கதைப்போமா?” எனும் இலக்கியக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதில் தமிழ் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள் தங்கள் இலக்கிய அனுபவங்களை பகிர்ந்து கொள்வதோடு, குழந்தைகளும் கதை வாசிப்பு மற்றும் உரையாடல்களில் பங்கேற்கின்றனர்.
இந்த நிகழ்வுகள் அனைத்தும் கேலக்ஸி யூட்யூப் சேனல் வழியாக பதிவேற்றப்பட்டு உலகெங்கும் பகிரப்பட்டு வருகின்றன.
தற்போது “கதைப்போமா?” கூட்டம் மதுரையிலும் மாதந்தோறும் நடைபெற்று வருகிறது.